ETV Bharat / state

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?

author img

By

Published : Nov 10, 2022, 9:02 AM IST

Updated : Nov 10, 2022, 9:21 AM IST

சென்னையில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு

சென்னையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வரும் ஐந்து நபர்களின் வீடுகளில் சென்னை காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் வெடி விபத்திற்கு பிறகு இந்தியா முழுவதும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்தது. அதன்படி சென்னையில் மட்டும் 18 நபர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

அதன்படி இன்று (நவ. 10) சென்னையில் மண்ணடி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் சென்னை காவல்துறையினர் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை

ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.

என்ஐஏ சோதனை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை, கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

Last Updated :Nov 10, 2022, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.